ஆதரவு தரவேண்டிய பொலிஸார் வேடிக்கை : குறுந்தூர்மலை விவகாரம் தொடர்பாக முறைப்பாடு

முல்லைத்தீவு குருந்தூர்மலையில் வழிபட்டு உரிமை மறுக்கப்பட்ட விடயம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளதாக வடக்குமாகாண சபை முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.

வழிபாடுகளை மேற்கொள்ள நீதிமன்றமும் அனுமதி வழங்கியுள்ள போதும் அதற்கு ஆதரவு தரவேண்டிய பொலிஸார் வேடிக்கை பாத்துக்கொண்டிருந்ததாவும் குற்றம் சாட்டியுள்ளார்.

வழிபட்டு உரிமை மறுக்கப்பட்ட விவகாரத்தில் பொலிஸாரும் உடந்தையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தோடு முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதாகவும் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.

நேற்று பிரதோசத்தை முன்னிட்டு குருந்தூர்மலை பகுதியில் பொங்கல் நிகழ்வை மேற்கொள்ள தமிழ் மக்கள் முற்பட்டபோது அங்கு வந்த தேரர்கள் மற்றும் சிங்கள மக்களால் அதற்கு இடையூறு விளைவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *