வவுனியாவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி விபத்து..! இருவர் படுகாயம்..!samugammedia

வவுனியா, பறநாட்டகல் பகுதியில் பாரவூர்தி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியது.

குறித்த சம்பவத்தில் பாரவூர்தியின் சாரதி மற்றும் நடத்துனர் இருவரும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை முருகண்டியில் இருந்து வவுனியா நோக்கி வந்த பாரவூர்தி பறன்நாட்டகல் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்தே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் வவுனியா ஓமந்தை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *