சீனாவில் பாடசாலைக் கட்டடமொன்றின் கூரை இடிந்துவீழ்ந்ததால் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹேய்லோங்ஜியாங் மாகாணத்திலுள்ள குய்குய்ஹார் நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை வரை 14 பேர் இடிபாடுகளிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர் என அரச ஊடகங்கள் தெரிவி;த்துள்ளன.
இவர்களில் நால்வர் உயிரிழந்து காணப்பட்டதாகவும் மேலும் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு நடவடிக்கைகளில் 39 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 160 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேற்படி சம்பவம் தொடர்பில், கட்டங்களுக்குப் பொறுப்பான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்







