வடமராட்சி பிரதேசத்தில் முச்சக்கர வண்டியும் பட்டா வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
மந்திகை, மடத்தடி பகுதியில் இன்று (25) இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
எதிர் எதிர் திசையில் பயணித்துக் கொண்டிருந்த இரு வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி தலைகீழாக புரண்டு சேதமடைந்துள்ளது.

விபத்து தொடர்பில் பருத்தித்துறை போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணை மேற்கொண்டுள்ளார்.





