யாழில் பெருமளவான கோடாவுடன் ஒருவர் கைது! samugammedia

இன்றையதினம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உயரப்புலம் பகுதியில் கசிப்பு காய்ச்சுவதற்கு தயாராக இருந்தவேளை, கசிப்பு காய்ச்சும் உபகரணங்கள் மற்றும் 40 லீற்றர் கோடா என்பவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இளவாலை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர். 

விசாரணைகளின் பின்னர் அவர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *