யாழ்ப்பாணத்தில் 500 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐகத் விசாந்த தலமையிலான மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கமைய பண்ணைப் பகுதியில் தேடுதல் நடாத்தினர்.
இதன் போது அப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்ற இளைஞரொருவரை சோதனை செய்த போது 500 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டது.
மேலும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதுடைய குறித்த இளைஞர் யாழ் தீவுப் பகுதியான சாட்டிப் பகுதியில் தற்காலிகமாக தங்கிநிற்பவரென விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரையும் அவரிடமிருந்து மீட்கப்பட்ட போதை மாத்திரைகளையும் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தியுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.