மீண்டும் களத்தில் 'கோட்டா கோ கோம்' போராட்டக் குழு..! ஞாயிறன்று முக்கிய நிகழ்வு..! samugammedia

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் செயல்பாட்டாளர்களுள் ஒருவராக இருந்த தானிஷ் அலி உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட மேலும் சிலர் ஒன்றிணைந்து ஆகஸ்ட் 6 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு அம்பாந்தோட்டை சிங்கப்பூர் மண்டபத்தில் ‘போராட்டத்தின் எதிர்காலம்’ என்ற தொனிப்பொருளில் மாநாட்டை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் ராஜித சேனாரத்னவின் மகன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன தலைமையிலான ஜனநாயக தேசிய இயக்கத்தினால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

எதிர்காலத்தில் 25 மாவட்டங்களையும் உள்ளடக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *