பொதுஜன பெரமுனவில் இருக்கும் பச்சிளம் பாத்திரம் உதயங்க வீரதுங்க…! நிமல் லான்சா கருத்து..!samugammedia

தனது அரசியல் நடவடிக்கைகள் மற்றும் பொதுஜன பெரமுனவின் அரசியல் விவகாரங்கள் பற்றி பேசும் உதயங்க வீரதுங்க, பொதுஜன பெரமுனவில் இருக்கும் பச்சிளம் பாத்திரம் எனவும்               இதனால், அவருக்கு பதிலளிப்பதில் பயனில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்கள் வாயிலாக புதிய அரசியல் கூட்டணி சம்பந்தமாக உதயங்க வீரதுங்க வெளியிட்டு வரும் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பசில் ராஜபக்ஷ, நான் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவை ஆரம்பிக்கும் போது உதயங்க வீரதுங்க, மிக் விமான மோசடியில் சிக்கி இலங்கைக்குள் வர முடியாமல் வெளிநாட்டில் இருந்தார்.

ராஜபக்ஷ என்ற பெயருடன் உறவு இருப்பதால் மாத்திரம் கட்சியை பற்றி பேச முடியாது.பொதுஜன பெரமுனவை பற்றி பேசுவதற்கு அவர் மிகவும் இளையவர். அந்த கட்சியை ஆரம்பிக்கும் போது அவர் எங்கிருக்கின்றார் என்பது தெரியாமல் இருந்தது.

போக்கிடம் இல்லாது மறைந்து இருந்து, கோட்டாபயவின் புண்ணியத்தில் மீண்டும் இலங்கைக்குள் வந்த நபர், புதிய அரசியல் கூட்டணியை பற்றி பேசுகிறார். இப்படியான திருடர்கள் காரணமாகவே ராஜபக்ஷவினரின் அரசியல் இல்லாமல் போனது. – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *