சாமிமலை பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி மூவர் காயம்! samugammedia

சாமிமலை கவரவில்லை பகுதியில் இன்று மதியம் 3.30.மணியளவில் குளவி கூடுகள் கலைந்து சென்ற வேளையில் வீதியில் சென்று கொண்டிருந்த மூன்று பேர் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டு ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் ஒருவர் மஸ்கெலியா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் கொட்டுக்கு இலக்கு ஆன ஒருவர் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வெளியேறினார்.

இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்குகாக முறையே 48 வயது ஆண் 38 வயது ஆண் 42 வயது உடைய ஆண் ஒருவர் அடங்குவர் என மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் உள்ள பகுதி நேர வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

இப் பகுதியில் கடுமையான வெப்பமான காலநிலை தோன்றியுள்ள நிலையில் குளவி கூடுகள் கலைந்து செல்வதை காண கூடியதாக உள்ளது என அப் பகுதியில் உள்ள தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply