குடும்பஸ்தர் வாளால் வெட்டிப் படுகொலை- பொலிஸார் தீவிர விசாரணை! samugammedia

குடும்பஸ்தர் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லுனாவ பிரதேசத்தில் வீடொன்றின் முன்பாக நேற்று இடம்பெற்றுள்ளது.

58 வயதுடைய நபரே உயிரிழந்துள்துள்ளார் என்று மொரட்டுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாக்குவாதத்தின்போது அந்த நபர் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply