தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை நாளை – வடக்கில் 18 ஆயிரத்து 759 மாணவர்கள் தோற்ற தயார்..!!! samugammedia

தரம் 5 இற்கான புலமைப் பரிசில் பரீட்சையில் 18 ஆயிரத்து 759 மாணவர்கள் தோற்றுவதாக மாகாண கல்விப் பணிப்பளர் குயின்ரஸ் தெரிவித்தார். 

வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் நாளை 15 ஆம் திகதி இடம்பெறவுள்ள தரம் 5இற்கான பரீட்சை ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் வடக்கில் இம்துறை 71 இணைப்பு நிலையங்களும் 209 பரீட்சை மண்டபங்களும் செயலபடவுள்ளது. இவ்வாறு செயல்படும் பரீட்சை மண்டபங்களிலேயே இந்த 18 ஆயிரத்து 759 மாணவர்களும் தோற்றவுள்ளனர். 

இதே நேரம் வடக்கில் பரீட்சைக்குத் தோற்றும மாணவர்களில் யாழ்ப்பாணம்  ஒன்று வலயத்தில் 12 இணைப்பு நிலையங்களின் கீழ் 41 பரீட்சை நிலையங்களில் 3 ஆயிரத்து 782 மாணவர்கள் பராட்சைக்குத் தோற்றும் அதேநேரம் யாழ்ப்பாணம்  02  வலயத்தில் 10 இணைப்பு நிலையங்களின் கீழ் 54  பரீட்சை நிலையங்களில் 5 ஆயிரத்து 208 மாணவர்கள் பராட்சைக்குத் தோற்றுகின்றனர். 

கிளிநொச்சி மாவட்டத்தில் 10 இணைப்பு  நிலையங்களின் கீழ் 28 பரீட்சை நிலையங்களில் 2ஆயிரத்து 219  மாணவர்களும், முல்லைத்தீவில் 09  இணைப்பு நிலையங்களின் கீழ் 24 பரீட்சை நிலையங்களில் 2 ஆயிரத்து 162  மாணவர்களும், வவுனியா மாவட்டத்தில் 14 இணைப்பு நிலையங்களின் கீழ் 34  பரீட்சை நிலையங்களில் 3 ஆயிரத்து 212  மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றும் அதேநேரம் மன்னாரில் 16 

இணைப்பு நிலையங்களின் கீழ் 28  பரீட்சை நிலையங்களில் 2 ஆயிரத்து 176 மாணவர்கள் தோற்றுகின்றனர் என்றார்.

Leave a Reply