முக்கிய கட்சியொன்றின் அமைப்பாளர் போதைப் பொருட்களுடன் கைது…!samugammedia

ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளர் ஒருவர் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நாடு பூராகவும் விசேட போதைப் பொருள் ஒழிப்பு திட்டத்தை அமுல்படுத்தும் வகையில் பதில் பொலிஸ் மா அதிபரினால்  அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது குருணாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளர் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த அமைப்பாளரை உடனடியாக கட்சியின் அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
அதேவேளை இது தொடர்பான மேலதிக தீர்மானங்கள் இன்று (22) நடைபெறவுள்ள கட்சியின் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *