இலங்கைக்கு கடத்த இருந்த 16 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்..!Samugammedia

ராமநாதபுரம் அருகே புது மடம் கடற்கரை பகுதியில் இருந்து இன்று (29) இலங்கைக்கு கடத்தல் பொருள் கடத்த உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

இதையடுத்து மரைன் போலீசார் புதுமடம் கடற்கரை பகுதிக்கு விரைந்து சென்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாட்டா ஏசி வாகனத்தை சோதனையிட்ட போது அதில் சோப்பு, எண்ணெய்,  வாசனை திரவியம் உள்ளிட்ட இந்திய பெறுமதியில் 16 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கடல் வழியாக இலங்கைக்கு கடத்த வாகனத்தை நிறுத்தி வைக்கப்படுகிறது தெரியவந்தது.

இதையடுத்து பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *