யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளன பிரதிநிதிகள் மாவை சேனாதிராஜாவை சந்தித்தனர்!

<!–

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளன பிரதிநிதிகள் மாவை சேனாதிராஜாவை சந்தித்தனர்! – Athavan News

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளன பிரதிநிதிகள், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை சந்தித்து கலந்துரையாடினர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள  மாவை சேனாதிராஜாவின் இல்லத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

அண்மையில் இலங்கை தமிழரசுக் கட்சியினால் தமிழக முதல்வருக்கு எழுதப்பட்டதாகக் கூறப்படும் கடிதத்தில் மீனவர் பிரச்சினைகள் தொடர்பில் எதுவும் பேசாமல் விட்டமை குறித்து இந்த கலந்துரையாடலின்போது பேசப்பட்டதாக சந்திப்பில் கலந்துகொண்ட கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தனர்.


Leave a Reply