மூதூரில் கிராமிய சுகாதார நிலையத்தை திறந்துவைத்த ஆளுநர் செந்தில் தொண்டமான்…!

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள மூதூர் -பெரியபாலம் கிராமிய சுகாதார நிலையம் புனரமைப்புச் செய்யப்பட்டு இன்று (09) காலை திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வு மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி ஹில்மி முஹைதீன் தலைமையில் இடம்பெற்றது.

சுகாதார மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 16 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட இக்கட்டிடத்தை முதன்மை அதிதியாக கலந்து கொண்ட  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார். 

இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரல ,  கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் G.G.M.கொஸ்தா ,பிரதி பிராந்திய சுகாதார சேவை வீ.பிரேமானந் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *