“குருதியால் தோய்ந்த நம் தேசத்திற்காய் ஒரு துளி குருதி” – குருதிக்கொடை நிகழ்வு!

குருதியால் தோய்ந்த நம் தேசத்திற்காய் ஒரு துளி குருதி எனும் தொனிப்பொருளில் குருதிக் கொடை புரிவதற்கு முன்வருமாறு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம்முயிர்த் தமிழ் மக்களை நினைவேந்தி குருதிக் கொடை செய்வோம் எனவும் குறித்த அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் நாளை (14.05.2024 – செவ்வாய்கிழமை) காலை 09.00 முதல் மாலை 03.00 வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முதன்மை வளாகத்தில் குறித்த குருதிக் கொடை வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரையும் உணர்வுரிமையுடன் அழைத்து நிற்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *