கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை..!

 

இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கல்பிட்டி முதல் கொழும்பு வரையிலும், ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையில் கடற்கரைப் பகுதியில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடல் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இந்த கடற்பகுதிகளில் இடைக்கிடை பலத்த மழை பெய்யும் எனவும், இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கடற்றொழிலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *