பேரெழுச்சி கொள்ளும் தமிழர் பகுதிகள்…! பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நோக்கி நகரும் நினைவேந்தல் ஊர்தி…!

கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற  முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த  உறவுகளை நினைவுகூர்ந்தது இன்றையதினம்(18) காலை கிளிநொச்சி தர்மபுரத்திலிருந்து முள்ளிவாய்க்கால் வலிகள் சுமந்த ஊர்தியானது முள்ளிவாய்க்கால்  முற்றத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறானதொரு நிலையில் குறித்த ஊர்தியை பொலிஸார் கடுமையாக சோதனைக்குட்படுத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் இன்றையதினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *