வாகரையில் பொலிஸார் அராஜகம்

வாகரை கதிரவெளி பகுதியில் பொலிஸாரின் தடையினையும் மீறிய வகையில் நேற்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி பரிமாறும் நிகழ்வு நடைபெற்றது.

கதிரவெளி வைத்தியசாலை பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இன்றைய தினம் வாகரை பிரதேச பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி பரிமாறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்போது அங்குவந்த வாகரை பொலிஸார் அங்கு கஞ்சி வழங்கும் செயற்பாட்டை முன்னெடுத்தவர்களை அச்சுறுத்தி அங்கிருந்து செல்லுமாறு எச்சரிக்கையும் விடுத்தனர்.

அத்துடன் உயிர்நீர்த்தவர்கள் நினைவாக ஈகைச்சுடர் ஏற்றுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களையும் வீசியெறிந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் உட்பட செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *