சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய செல்லும் யாத்திரியர்களுக்கு முக்கிய வேண்டுகோள்..!!

சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய செல்லும் யாத்திரியர்களுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றை இப் பகுதிக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி பணித்து உள்ளார்.

கடும் மழை கடும் காற்று வீசுவதால் மலைக்கு தரிசனம் செய்ய செல்லும் யாத்திரிகர்கள் மிகவும் அவதானமாக செல்ல வேண்டும் கடும் காற்று காரணமாக மரக் கிளைகள் முறிந்து விழும் அபாயமும், கடும் மழை காரணமாக மலை உச்சியில் இருந்து படிக்கட்டுகள் வழியாக அதிகளவில் நீர் வழிந்து ஓடுகின்றது.

அதனால் படி ஏறி செல்பவர்கள் மற்றும் படி இறங்கி வருபவர்கள் மிகவும் அவதானமாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர கூறுகையில்

நல்லதண்ணி நகரில் வாகனங்கள் நிறுத்தும் போது மரங்கள் இல்லாத பகுதிகளில் நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளார்.

காரணம் மரக் கிளைகள் முறிந்து விழும் அபாயமும் உள்ளது அத்துடன் இன்று பலத்த காற்று வீசுவதால் மரக் கிளை ஒன்று முச்சக்கர வண்டி மேல் விழுந்ததால் முச்சக்கர வண்டியின் முன் பக்கம் உள்ள கண்ணாடி உடைந்தது உள்ளது.

இவ்வாறு ஆபத்துக்கள் அதிகம் உள்ளதால் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார் .

Leave a Reply