ஒரே இடத்தில் சடலமாக மீட்கப்பட்ட 07 யானைகள்!

பொலன்னறுவை தேசிய பூங்காவின் ஹந்தபன்வில்லு ஏரியில் உயிரிழந்த ஏழு காட்டு யானைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் பின்னர் காட்டு யானைகள் ஓடை கால்வாயை கடக்கும் போது சேற்றில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரித்தலை வனவிலங்கு கால்நடை வைத்திய பிரிவின் வைத்திய குழுவினர் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *