நிபந்தனையுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன இறக்குமதிக்கு அனுமதி..!

 

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தீர்வையற்ற வாகன இறக்குமதிக்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் அளித்துள்ளதாக தெரியவருகின்றது.

ஜனாதிபதி ரணில் தலைமையில் நேற்று(19) நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரங்களை பெறுவோர் திறைசேரிக்கு 10 வீத வரியை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையும் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த வரி தொடர்பான விபரங்களை திறைசேரி விரைவில் அறிவிக்கவுள்ளதாக தெரியவருகின்றது.

Leave a Reply