புத்தளத்தில் வழங்கப்பட்ட ஜஸ்கிறிம் தன்சல் – நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்

பொசன் போயாவை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளிலும் தன்சல் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்   ஜஸ்கிறிம் தன்சல் அதிகளவான பிரதேசங்களில் வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் புத்தளம் – தில்லையடி பகுதியில் இளைஞர்களினால்   ஜஸ்கிறிம் தன்சல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஐஸ்கிரீம் தன்சலை பெறுவதற்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

இதேவேளை பொசன் தானசாலைகளை பரிசோதனைக்குட்படுத்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காரியாலயம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாடளாவிய ரீதியில் 9, 425 குளிர்பான தானசாலைகளும், 8,782 உணவு வகை தான சாலைகளும் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply