முன்னாள் எம்.பிக்களுக்கு அடுத்த சிக்கல்..! இராஜதந்திர கடவுச்சீட்டைப் பயன்படுத்த தடை!

 

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது இராஜதந்திர கடவுச்சீட்டைப் பயன்படுத்துவதற்குத் தகுதியற்றவர்கள் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளார்.

அவர்கள் வெளிநாடு செல்ல வேண்டுமாயின், சாதாரண கடவுச்சீட்டின் மூலம் பயணிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர், இராஜதந்திர கடவுச்சீட்டுகள், கொடுப்பனவுகள், தொலைபேசி கொடுப்பனவுகள் உள்ளிட்ட சலுகைகளும் ரத்து செய்யப்படும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *