பத்தரமுல்லை சீலரதன தேரர் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு..!

எதிர்வரும் கார்த்திகை மாதம் 14ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், கட்டின பெரஹராக்களுக்கு இடையூறுகள் ஏற்படும் என பத்தரமுல்லே சீலரதன தேரர் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளார். 

அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த பத்தரமுல்லே சீலரதன தேரர் , 

எதிர்வரும் கார்த்திகை மாதம் 13ஆம் திகதி பாராளுமன்ற தேர்தலை நடத்தி வெற்றியை 14ஆம் திகதி கொண்டாட வேண்டும். 

14ஆம் திகதி இரவு வாக்களிப்பின் பின்னர் குழப்பமான சம்பவங்கள் இடம்பெற்றால் கட்டின பூஜை மற்றும் கட்டின பெரஹராவிற்கு இடையூறு ஏற்படும் எனவும் இந்த திகதியில் திருத்தம் மேற்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *