புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையை கடுமையாக குறைக்கும் கனடா!

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கம் ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலப் பகுதியின் பின்னர் முதன் முறையாக நாட்டிற்குள் அனுமதிக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கடுமையாக குறைக்கும் திட்டத்தை வெளியிட்டது.

அதன்படி, கனடா தனது வருடாந்திர நிரந்தர-குடியிருப்பு இலக்கை அடுத்த ஆண்டு சுமார் 395,000 ஆக குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது கடந்த ஆண்டு நிர்ணயித்த அரை மில்லியனாக இருந்த முந்தைய இலக்கை விட 21% குறைவாகும்.

அதன்படி, கனடா 2025 இல் 395,000 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களையும், 2026 இல் 380,000 குடியிருப்பாளர்களையும், 2027 இல் 365,000 குடியிருப்பாளர்களையும், 2024 இல் 485,000 குடியிருப்பாளர்களையும் குறைக்கும் என்று கனேடிய அரசாங்க ஆதாரங்களை மேற்கொள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

குடிபெயர்ந்தோர் வீட்டு நெருக்கடி முதல் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு வரை கனடா அண்மைக்காலங்களில் கடும் ந‍ெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

இதேவ‍ேளை, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பதவியில் இருந்து விலகுமாறும் கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

 

கனேடிய பிரதமருக்கு காலக்கெடு!

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை (Justin Trudeau) பதவியில் இருந்து விலகுமாறு அவரது கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நியூயார்க் டைம்ஸ் செய்தியின்படி,

லிபரல் கட்சியின் கிட்டத்தட்ட 153 உறுப்பினர்கள் புதன்கிழமை (23) கலந்து கொண்ட கூட்டத்தில் இராஜினாமா செய்வதற்கான அழுத்தம் கொடுக்கப்பட்டது.

கூட்டத்தில், ட்ரூடோவிடம் எதிர்வரும் ஒக்டோபர் 28 ஆம் திகதிக்குள் இராஜினாமா செய்யக் கோரி சுமார் 24 கட்சி உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் வழங்கப்பட்டது.

சுமார் ஒன்பது ஆண்டுகளாக கனடாவின் பிரதமராகப் பணியாற்றி வரும் ட்ரூடோ, தனது சொந்தக் கட்சிக்குள்ளேயே கடந்த காலமாக கடுமையான அதிருப்தி எதிர் கொண்டுள்ளார்.

அதேநேரம், கட்சி இரண்டு இடைத்தேர்தல்களில் தோல்வியடைந்ததை அடுத்து, அடுத்த ஆண்டு ஒக்டோபரில் நடைபெறவுள்ள தேர்தலை இக்காககக் கொண்டு அவரை நீக்குவதற்கான அழுத்தம் வந்துள்ளது.

அது தவிர, 2023 செப்‍டெம்பரில் காலிஸ்தானி பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொல்லப்பட்டதில் இந்திய முகவர்களின் “சாத்தியமான” ஈடுபாடு குறித்த ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை வந்துள்ளது.

Leave a Reply