தும்பங்கேணி நெற்சந்தைப்படுத்தும் நிலையம் படையினரால் துப்புரவு

 

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கிழ் தும்பங்கேணி நெற்சந்தைப்படுத்தும் நிலையம் படையினரால் துப்பரவு செய்யப்பட்டது.

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் குறித்த வேலைத்திட்டம்  மேற்கொள்ளப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.

இந்நிலையில் மட்டக்களப்பு கல்லடி 243 வது இலங்கை இராணுவ படைப்பிரிவின் பொறுப்பதிகாரியின் ஆலோசனையின் பெயரில் குருக்கள்மடம் இராணுவ முகாம் படையினரால் கிளீன் ஸ்ரீலங்கா வேலத்திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குப்பட்ட தும்பங்கேணி நெல் சந்தைப்படுத்தும் நிலையம் இன்று துப்பரவு செய்யப்பட்டன.

இதுவரைகாலமும் துப்பரவுப் பணிகள் செய்யாமால் காணப்பட்டிருந்த குறித்த நெற்சந்தைப்படுத்தும் நிலையம் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின்கீழ் இதன்போது படையினரால் துப்பரவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *