நாட்டில் நிலவும் கடும் வெப்ப காலநிலையால் மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திணறிப் போயுள்ளனர்.
என்றுமில்லாத அளவிற்கு வெளியில் செல்ல முடியாமலும் வீட்டிற்குள் இருக்க முடியாமலும் வெப்பத்தால் மக்கள் அல்லோலப்பட்டுக் கொண்டுள்ளனர்.
இன்று நாடு முழுவதும் எவரைக் கேட்டாலும் என்னப்பா..! என்ன வெயில்…!தலையே சுற்றுர மாதிரி இருக்கு! எங்கடா ..!போவம்..!எங்க சரி குளத்தில போய்த்தான் பாய வேனும் ..!என்றவாறு கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் தான் புத்தளம் எலுவங்குளம் பகுதி நீரோடையானது தற்போது மக்கள் கூட்டத்தால் நிரம்பியுள்ளது.
இளைஞர்கள், யுவதிகள், சிறுவர்கள், பெரியோர்கள் என அனைவரும் ஆற்றில் நீராடியுள்ளனர்.
வாகனங்களில் நீண்ட நேரம் பயணம் செய்ய முடியமால் பலர் வாகனங்களை நிறுத்தி விட்டு ஆற்றில் குதித்து நீராடியுள்ளனர்.
வெப்பத்தின் கொடூரத்தால் அல்லோலப்பட்ட மக்கள் வெப்பத்தைத் தணிக்க வேறு வழியின்றி ஆற்றில் குதித்துள்ளளனர்.
மிகவும் சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் அவர்கள் ஆற்றில் குதித்து விளையாடும் காட்சிகள் தற்போது வைரலாகியுள்ளது.





