இன்றையதினம் வடக்கு மாகாண அழகக கூட்டுறவு சமாசங்களின் சம்மேளனத்தின் முக்கிய கலந்துரையாடல் ஒன்று கல்வியங்காடு பகுதியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது சிகையலங்கார நிலையங்களின் விடுமுறைகள், மாணவர்களது சிகையலங்காரம், சிகையலங்கார நிலையங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், சிகையலங்கார நிலையங்கள் குறித்து அண்மையில் அரசியல் கட்சி சார்ந்தவர் முன்வைத்த விமர்சனம் போன்றன குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அதன்பின்னர் எடுக்கப்பட்ட தீர்மானங்கள், நடவடிக்கைகள் குறித்து ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நடாத்தப்பட்டது.





