மேபீல்ட் பெருந் தோட்டத்தில் தொழிலாளியை தாக்கிய உதவி முகாமையாளர்!

கொட்டகலை பெருந்தோட்ட யாக்கத்திற்க்கு உரித்தான திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவில் உள்ள மேபீல்ட் பெருந் தோட்டத்தில் இச்சம்பவம்  இடம் பெற்று உள்ளது.

இச் சம்பவம் குறித்து திம்புள்ள பத்தனை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

மேபீல்ட் பெருந் தோட்ட முகாமையாளர் தோட்ட தொழிலாளர்களை மிகவும் அடிமை தனமாக நடத்தி வருவதாகவும் தொடர்ந்து தொழிலாளர்களை பழிவாங்கும் நோக்கில் ஈடுபட்டு வருகிறார் அத்துடன் தோட்டத்தில் பணியாற்றி வரும் காவலாளி தாக்கப்பட்டு கொட்டகலை மாவட்டம் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இன்று காலை தோட்ட பிரட்டுகளத்தில் காவலாளி தாக்கப்பட்டது சம்பந்தமாக எழுந்த வாக்குவாதத்தில் தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர் மேற்பார்வை அதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் மாட்டு சாணத்தால் தாக்குதல் நடத்தபட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் குறித்து திம்புள்ள பத்தனை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேபீல்ட் தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிரிவுகளில் உள்ள சுமார் 1000 தொழிலாளர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர் மேற்பார்வை அதிகாரி உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை முன் வைத்து இந்த பணி பகிஸ்கரிப்பு மேற் கொண்டு வருகின்றனர்.

Leave a Reply