யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு, மருதங்கேணி, மாமுனை ஆகிய கிராமங்களில் மருதங்கேணி பொலிசார் இன்று காலை 7 மணி முதல் சுற்றிவாழைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதில் மருதங்கேணி பொலிசாருடன் பருத்தித்துறை, நெல்லியடி போலீசாரும் கலந்து கொண்டனர்.
இதில் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களை தேடுதல், உட்பட சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோர் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக மருதங்கேணி போலீஸ் நிலைய தகவல் தெரிவிக்கின்றனர் இதன்போது எவரும் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





