ஓடிக்கொண்டிருந்த உந்துருளி திடீரென தீப்பற்றிய அதிர்ச்சி சம்பவம்

காலி – அக்குரஸ்ஸ பிரதான வீதியின் கடுகொட பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த உந்துருளி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உந்துருளியில் இருந்து புகை வெளியேறியதை அவதானித்த அப்பகுதி மக்கள் மற்றும் வீதியால் சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக ஒன்றிணைந்து தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

அவர்களின் விரைவான செயற்பாட்டால் தீ பரவுவதற்கு முன்பே அணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் எவருக்கும் காயங்களோ உயிர்ச் சேதமோ ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உந்துருளியில் ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறே தீப்பரவலுக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply