திருகோணமலை குச்சவெளி பிரதேச சபை மற்றும் பொது மக்கள் இணைந்து கிளீன் சிறீலங்கா வேலை திட்டத்தின் கீழ் டெங்கு சிரமதான நிகழ்வு இன்று (27) குச்சவெளி அந்நூரியா (An Nooriya) பாடசாலை வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடம் பெற்றன.
தேசிய டெங்கு நோய் வாரத்தை முன்னிட்டு அரசின் கிளீன் சிறீலங்கா தேசிய வேலை திட்டம் ஊடாக குறித்த டெங்கு நோய் சிரமதான பணி இடம் பெற்றன.
இதில் குச்சவெளி பிரதேச பொது மக்கள் மற்றும் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர்கள் ‘ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பிளாஸ்டிக் பாவனை பொருட்கள் டெங்கு குடம்பிகள் பரவும் இடங்களும் இதன் போது அழிக்கப்பட்டன.





