வரி செலுத்தாமல் ஏமாற்றிய கசினோ மைய உரிமையாளர்கள்!

கசினோ மைய உரிமையாளர்கள் இருவர் தங்கள் வரி நிலுவையை செலுத்த ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் ஆயிரத்து முன்னூறு மில்லியன் ரூபா வரி செலுத்தாமல் இருந்த இரண்டு கசினோ மைய உரிமையாளர்கள் தங்கள் வரி நிலுவையை செலுத்த ஒப்புக் கொண்டுள்ளனர்.

நாட்டின் முதல்தர பணக்காரராக கருதப்படும் கசினோ மைய உரிமையாளர் ஒருவர் 576 மில்லியன் ரூபா வரி மிகுதியையும், மற்றொருவர் 760 மில்லியன் ரூபா வரி மிகுதியையும், மிக நீண்ட காலமாக செலுத்தாமல் இருந்துள்ளனர்.

எனினும் தற்போதைய நிலையில் சூதாட்டம் தொடர்பான சட்டங்களை அரசாங்கம் திருத்தி, அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதனையடுத்து 576 மில்லியன் வரி மிகுதியை கொண்டுள்ள கசினோ மைய உரிமையாளர் அதனை ஒரே தடவையில் செலுத்தவும், அடுத்தவர் தனது வரி மிகுதி 760 மில்லியன் ரூபாவில் பாதியை முதலில் செலுத்திவிட்டு, மிகுதியை தவணை முறையில் செலுத்தவும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply