
தமக்கு வழங்கப்படும் சீருடைகள் தரமற்றதாக இருப்பதால் தாம் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சீருடையை ஒருமுறை துவைத்தவுடன் சீருடையின் நிறம் மற்றும் அளவு மாறுவதுதான் முக்கிய பிரச்சினையாக உள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால், வெளிக் கடைகளில் பணம் கொடுத்து சீருடை வாங்க வேண்டியுள்ளது என்கின்றனர்.
இப்பிரச்சினையால் பொலிஸ் உயரதிகாரிகளும், அதிகாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உயர் அதிகாரிகளின் அனுசரணையுடன் சீருடைகள் வாங்கப்படுகிறதே தவிர, தரம் சரிபார்க்கப்படாமல் இருப்பதே இதற்குக் காரணம் என பொலிஸ் உள் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் உரிய பிரிவுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்





