புதுப்பிக்கத்தக்க மின்சக்திக்கான கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்- சஜித்

புதுப்பிக்கத்தக்க மின்சக்திக்கான கட்டமைப்பை நாட்டின் இன்னமும் பலப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட அவர், இந்த நாட்டில் புதுப்பிக்கத்தக்க மின்சக்திக்கான கட்டமைப்பை இன்னமும் பலப்படுத்த வேண்டும்.

இதனை அதிகரிக்க வேண்டும். இதற்கு எதிர்க்கட்சி எனும் வகையில் நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயராகவே உள்ளோம்.

நாட்டின் எதிர்க்காலமானது சூரிய சக்தி, காற்றாலை மற்றும் நீர் மின் உற்பத்தியை இலக்காக் கொண்டே பயணிக்க வேண்டும்.

டீசல் மற்றும் நிலக்கரியூடான மின்சார உற்பத்திக்கு அதிக செலவேற்படுவதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம்.

ஆனால், அரசாங்கங்கமானது டீசல் மாபியா ஒன்று இடம்பெறுவதாகக் குறிப்பிட்டு இதனை முற்றாக இல்லாதொழிக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதன் ஊடாக போட்டித்தன்மை இல்லாது போனால், ஊழல் வாதிகளுக்கும் மோசடியாளர்களுக்கும் அதிக நன்மை ஏற்படும்.

எனவே, இதற்கு நாம் ஒத்துழைப்பினை வழங்க முடியாது. நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கொடுக்கல்- வாங்கல்களுக்கு நாம் என்றும் இடமளிக்கப்போவதில்லை எனத் தெரிவித்தார்.

Leave a Reply