ஜோன்ஸ்டனை நீதிமன்றத்தில் சரணடையுமாறு உத்தரவு!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை நீதிமன்றத்தில் சரணடையுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கமைய இன்று இரவு 8 மணி அல்லது அதற்கு முன்பாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நீதிமன்றத்தில் சரணடைய வேண்டுமேன மேன்முறையீட்டு நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், கோட்டை நீதவான் நீதிமன்றம் வழங்கிய பிடியாணை உத்தரவை குறித்த காலப்பகுதி வரை செயற்படுத்த வேண்டாம் எனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply