ரூ 2.67 மில்லியன் சம்பளத்தை மருத்துவத்துறைக்கு நன்கொடையாக வழங்கிய வைத்தியர் ஷாபி  

கொழும்பு, ஜூன் 13

குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி  சிஹாப்தீன் தனக்கு வழங்கபட்ட சம்பள நிலுவைத் தொகையை இலங்கைக்கான அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக அன்பளிப்பு செய்ய தீர்மானித்துள்ளார்.

டொக்டர். ஷாபி சிஹாப்தீனின் காலதாமதமான ஊதியத்தை 2022 ஜூலை 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதற்கு சுகாதார அமைச்சு  கடந்த வாரம் ஒப்புக்கொண்டது. அமைச்சகம் . 2.67 மில்லியன் ரூபா நிலுவைத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது,    இதனை  நாட்டில் உள்ள மருந்துப் பற்றாக்குறையைத் தணிக்க டாக்டர் ஷாபி அவர்களால் நன்கொடையாக வழங்கபப்ட்டுள்ளது.

சம்பள நிலுவைகளில் அடிப்படை சம்பளம், இடைக்கால கொடுப்பனவு, வாழ்க்கைச் செலவு மற்றும் டாக்டர்  ஷாபி சிஹாப்தீனுக்கு விதிக்கப்பட்ட கட்டாய விடுப்புக் காலத்திற்கான ஓய்வூதியத்திற்குப் பதிலாக கொடுப்பனவு ஆகியவை அடங்கும்.

குருநாகல் போதனா வைத்தியசாலையில் சட்டவிரோத கருத்தடை சத்திரசிகிச்சைகளை மேற்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் வைத்தியர் சிஹாப்தீன் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply