
எரிபொருள் தொடர்பில் அறிமுகம் செய்துள்ள விலைச்சூத்திரத்துக்கமைய எரிபொருள் விலைகள் ஜூன் 24 இல் திருத்தப்படும் மேலும் எரிபொருள் விலைகளுக்கேற்ப மின்கட்டணத்தை அதிகரிக்கவோ குறைக்கவோ நடவடிக்கை எடுக்க இருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் எம்.பி.டி.யு.கே மாபா பத்திரன தெரிவித்துள்ளார்.
உலகச் சந்தையின் எண்ணெய் விலைகள் உட்பட பல காரணிகளை மீளாய்வு செய்ததன் பின்னர், எரிபொருள் விலைகள் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அல்லது மாதாந்தம் உரிய விலைச் சூத்திரத்துக்கமைவாக மாற்றியமைக்கப்படுவதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
பிற செய்திகள்