மருதானையில் விபச்சார விடுதி சுற்றி வளைப்பு: எட்டு பேர் கைது

கொழும்பு, ஜுன் 14

கொழும்பு, மருதானை ஜினானந்த மாவத்தையில் விபசார விடுதியொன்றை சுற்றிவளைத்து 6 பெண்கள் உட்பட 8 பேரைக் கைது செய்ததாக கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த பெண்கள் 2,000 ரூபா முதல் 5,000 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தப் பெண்களில் 21 வயதுடைய யுவதி ஒருவரும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இரகசியப் புலனாய்வாளராக நியமிக்கப்பட்டே இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன.

வெல்லம்பிட்டிய, பசறை, கம்பளை மற்றும் வடுமுல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பெண்களே கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *