கடலில் நீராடச் சென்ற தாய் மற்றும் மகன் மாயம்!

கடற்பகுதியில் நீராட சென்ற, தாய் (55) மற்றும் மகன் (16) உட்பட மூவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்றையதினம் அம்பலாந்தோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பலியானவர்களில், உயிரிழந்த பெண்ணுடைய சகோதரியின் 22 வயது மகனும் உள்ளடங்குகிறார்.

இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கடலில் நீராடச்சென்று காணாமல் போவோர் தொடர்பான செய்திகள் அடிக்கடி வெளியாகின்றன.

எனவே உரிய பாதுகாப்பு உறுதிப்படுத்தி பொதுமக்கள் இந்த இடங்களுக்கு செல்லவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *