
ஜெனீவா, ஜுன் 15
நாடளாவிய ரீதியில் இன்று முதல் மீண்டும் சமையில் எரிவாயுவை விநியோகிப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
கெரவலப்பிட்டி தல்தியவத்தை கடற்பகுதியில் கடந்த 7 நாட்களாக நங்கூரமிட்டிருந்த எரிவாயு கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ள நிலையில் லிட்ரோ நிறுவனம் குறித்த அறிவிப்பினை விடுத்துள்ளது.
அத்துடன் 3.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதுடன் சுமார் 20 மில்லியன் ரூபா தாமத கட்டணமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது