ரூபாவின் பெறுமதியில் தொடர் வீழ்ச்சி

இலங்கை நாணயமான ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியுற்றுக் கொண்டிருப்பதாக மத்திய வங்கியின் அறிக்கை தெரிவிக்கின்றது.

கடந்த ஜனவரி தொடக்கம் ஜூன் இரண்டாம் வாரம் வரையான காலப்பகுதிக்குள் ரூபாவின் பெறுமதி 44.3 வீதத்தினால் பாரிய வீழ்ச்சியை எதிர்கொண்டிருந்தது.

எனினும் மே மாத நடுப்பகுதியில் அரசாங்கம் மேற்கொண்ட சில நடவடிக்கைகள் காரணமாக தற்போதைக்கு ரூபாவின் பெறுமதியில் ஒரு நிலையான தன்மை ஏற்பட்டு வருவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக அமெரிக்க டொலர் மட்டுமன்றி யூரோ, ஆஸ்திரேலிய டொலர், ஜப்பானிய யென் , இந்திய ரூபா என்பவற்றின் ரூபாவுக்கு எதிரான பெறுமதியும் கணிசமான அளவில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *