கட்டுநாயக்கவில் தரையிறங்கியதால் தவிர்க்கப்பட்ட விபத்து

மிகப்பெரிய விபத்தை தவிர்ப்பதற்காக லண்டனில் இருந்து பயணித்த யு.எல். 504 விமானம் நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியுள்ளது.

இதனால் துருக்கிய வான்வெளியில் இருக்கும் போது பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானத்துடன் இடம்பெறவிருந்த விபத்து தவிர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யு.எல். 504 விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஹீத்ரோவில் இருந்து பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானம் டுபாய் மற்றும் சிங்கப்பூர் நோக்கிச் செல்ல புறப்பட்டுள்ளதாக தெரியவந்தள்ளது.

275 பயணிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்ற விமானம், ஹீத்ரோவில் இருந்து கொழும்பு செல்லும் வழியில் அங்கராவின் துருக்கி வான்வெளியில் இந்த விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

இருப்பினும் விமானத்தில் சென்ற பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பாக இறங்கினர் என்றும் இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *