மரக்குற்றியொன்று நெஞ்சு பகுதியில் மோதியதில் நபர் ஒருவர் பலி

வெட்டி வீழ்த்தப்பட்ட மரமொன்றை, குற்றிகளாகவெட்டிக் கொண்டிருந்தபோது மரக்குற்றியொன்று நெஞ்சு பகுதியில் மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்றையதினம் தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிறேஸ்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் தலவாக்கலை கிறேஸ்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தைச் சேர்ந்த 4 வயதுடைய செல்லதுரை மணிமாறன் என்பவர் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *