இன்புளுவன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

அனுராதனபுரம் – கலவான பிரதேசத்தில் கடந்த மாதத்தில் பதிவான இன்புளுவன்சா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இன்புளுவன்சா நோயாளர்கள் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நான்கு வாரங்களில் நாடளாவிய ரீதியில் இன்புளுவன்சா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான பிரதேசத்தில் நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கலவான வைத்தியசாலையில் இதுவரை 103 வழக்குகள் பதிவாகியுள்ளன, அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் 14 பேர் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் என கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

Leave a Reply