ஒக்டேன் 92 ரக பெட்ரோலினை கொள்வனவு செய்வதற்கான கடன் பத்திரம் திறக்கப்பட்டது!

<!–

ஒக்டேன் 92 ரக பெட்ரோலினை கொள்வனவு செய்வதற்கான கடன் பத்திரம் திறக்கப்பட்டது! – Athavan News

ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 3 இலட்சம் பீப்பாய்களை கொள்வனவு செய்வதற்கான கடன் பத்திரம் திறக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 42.6 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் பத்திரம் மக்கள் வங்கியினால் திறக்கப்பட்டுள்ளது.

வெகுவிரைவில் கடன் பத்திரம் திறக்கப்படும் பட்சத்தில் இந்த வார இறுதியில் பெட்ரோலை இறக்குமதி செய்ய முடியும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே பெட்ரோல் கொள்வனவுக்கான கடன் பத்திரம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Leave a Reply