கவுணாவத்தை வயிரவர் ஆலயத்தின் வருடாந்த வேள்வித் திருவிழா (படங்கள் இணைப்பு)

வலி. வடக்கு கீரிமலை கவுணாவத்தை வயிரவர் ஆலயத்தின் வருடாந்த வேள்வித் திருவிழா இன்று இடம்பெறுகின்றது.

நாட்டில் ஏற்பட்ட கொரோனாத் தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக இடம்பெறாத போதிலும் தற்போது கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் சூழல் இடம்பெறுகின்றது.

வேள்விக்காக நேற்று முதல் மிகப் பெரும் ஏற்பாடுகள் மேற்கொண்டு ஆட்டுக் கடாக்கள் ஆலயம் நோக்கி அழைத்து வரப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தில் மிக நீண்டகாலமாக வேள்வி இடம்பெறுகின்றபோதும் ஓர் வழக்கின் காரணமாக 4 ஆண்டுகள் தடைப்பட்டிருந்த நிலையில், ஆலயத்தினரின் தொடர் முயற்சியினால் தடைகள் தாண்டி வேள்வி இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply