கண்டி எசல பெரஹரா தொடர்பில் விசேட அறிவிப்பு!

கண்டி வரலாற்றுப் புகழ்மிக்க எசல பெரஹரா ஆகஸ்ட் 2ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக தலதா மாளிகை தியவதன நிலமே பிரதீப் திலங்கதெல அறிவித்தார்.

எசல பெரஹராவுக்காக காப்பு கட்டல் நிகழ்வு 29ஆம் திகதி அதிகாலை நடைபெற்று ஆகஸ்ட் 1ஆம் திகதி வரை உள்வீதி பெரஹரா, 2ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை பெரஹராவும் 7ஆம் திகதி முதல் 11ஆம் திகதி முதல் சிறப்பு மிக்க ரந்தோலி பெரஹராவும் நடைபெற்று 12ஆம் திகதி நீர்வெட்டுடன் பகல் பெரஹரா நடைபெறவுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply