
கடந்த சில மாதங்களாக தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்களது இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து வருகின்றது.
இவ்வாறான நிலையில் கடந்த சில மாதங்களாக எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக யாழின் பல பகுதிகளிலுமுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்னே பொதுமக்கள் காத்துகிடக்கின்றனர்.
இதேவேளை யாழின் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று எரிபொருள் கிடைக்கவுள்ளதாக அறிந்த மக்கள் அதிகாலை முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையிலும் இது வரை எரிபொருள் கிடைக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பிற செய்திகள்





